கட்டுரைத் தொகுப்பு |
Reverse
mortgage (மீள் அடமானம்) - பாலமுகுந்தன் |
Reverse mortgage (மீள் அடமானம்)
இந்த வருடம் மத்திய நிதிநிலை
அறிக்கையில் நிதியமைச்சர் திரு
ப.சிதம்பரம் அறிவித்த ஒரு திட்டம்.
“89. The National Housing Bank (NHB) will shortly introduce a novel product for senior citizens: a ‘reverse mortgage’ under which a senior citizen whose is the owner of a house can avail a monthly stream of income against the mortgage of his/her choice, while remaining the owner and occupying the house throughout his/her life time, without repayment or servicing of the loan.” -- Quoted from the Budget speach. அடமானம் (mortgage) என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. நம்மிடம் உள்ள அசையா சொத்து (fixed assets like house or land) ஒன்றை, அடமான வங்கியிலோ, அல்லது வணிக வங்கியிலோ ஈடாக வைத்து அதன் மதிப்பில் ஒரு பகுதியை கடனாக பெறுதல் ஆகும். இன்னொரு வகை, இன்று மிகவும் அதிக அளவில் நடைமுறையில் இருக்கும் ஒன்று. இதன் மூலமாக அசையா சொத்தை உருவாக்கவதற்காக வங்கிகளில் கடன் வாங்குவது. (for construction of houses or apartments). இந்த இரு முறைகளிலும் உள்ள ஒரு ஒற்றுமை – கடனை மொத்த தொகையாக வாங்கி, பின்னர் தவணை முறையில் அதை திருப்பிச் செலுத்துவது. சரி, பின்னர் reverse mortgage (மீள் அடமானம்) என்றால் என்ன? மீள் அடமானத்தில், வீட்டை அடமானம் வைத்து, ஒரு குறிப்பிட்ட தொகையை, அன்றாட தேவைகளுக்காக மாதா மாதம் பெறுவதே ஆகும். இதை “மீள் அடமானம்” என்று குறிப்பிடுவது முற்றிலும் தகும் என நினைக்கிறேன், ஏனென்றால், இந்த அடமானம் வாழ்நாளில் வயதான பருவத்தில், உருவாக்கிய சொத்தை மீண்டும் அடமானம் வைத்து, வாழ்க்கைச் செலவிற்கு தேவையான பணத்தை மீண்டும் பெறுவதற்காக வைக்கும் அடமானமாகும். மீள் அடமான வசதி ஏன் தேவைப்படுகிறது? இந்நாளின் வாழ்க்கை முறைகள், சிறு குடும்பங்கள் (nuclear families), போதுமான சேமிப்பு இல்லாமை, பண வீக்கம், குறைவான ஓய்வு வருமானம், குறையும் வட்டி விகிதங்கள், குறைந்த நம்பகத்தன்மையுடைய முதலீட்டு வழிகள், சராசரி வாழ்நாளின் (average life expectancy) அதிகரிப்பு மற்றும் சில காரணங்களே மீள் அடமானம் போன்ற கடன் வசதிகளை அமல் படுத்த வைத்துள்ளன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சம்பாதிப்பவை அனைத்தும் தங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் மட்டுமே செலவிடப்படுவதால், ஓய்வு வாழ்க்கைக்கு தேவையான வருமானம் ஈட்டும் முதலீடுகள் செய்யப்பட முடிவதில்லை. கூட்டுக் குடும்ப முறையை மறந்து போனதினாலும் சிறிய குடும்ப வாழ்க்கை முறையினாலும், குழந்தைச்செல்வங்கள் மேல்நாட்டில் வேலை செய்வதாலும், வயதான காலத்தில் ஆதரவும் குறைந்து வருமானமும் குறைந்து போய் விடுகிறது. மேலும் பொருளாதார நிலைப்பாடுகளால், முதலீடு செய்த பணத்திற்கு வட்டி விகிதங்கள் குறைந்து போய் விட்டன. 1980/90 களில் வங்கிகள் அளித்த வட்டி விகிதம் இப்போது பாதியாக குறைந்து போய் விட்டது. வருங்கால சேமிப்பின் (profident fund) தற்போதைய மதிப்பு 60/70 விழுக்காடு குறைந்து போய் விட்டது. 1970 களில் செலுத்தப்பட்ட 8.33 விழுக்காட்டுத் தொகை இன்றைய மதிப்பில் ஒன்றுமேயில்லை. பலருக்கு, ஓய்வூதியத்தினால் மாதத்தின் முதல் 5 நாள் செலவைக் கூட ஈடு கட்ட முடியாது. பணவீக்கத்தால், விலை வாசி ஏற்றம், முதலீடுகளை மதிப்பில்லாமல் ஆக்கிவிட்டன. பெற்றோர்களும் பிள்ளைகளை சார்ந்து வாழும் நிலையை விரும்புவதில்லை. இவ்வாறன நிலையில் “மீள் அடமானம்” உதவி செய்கிறது. வேலை பார்க்கும் காலத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு, மேற்கூறிய பணவீக்கம், சந்தை வளர்ச்சி, மதிப்பீட்டு உயர்வு (appreciation) காரணமாக இன்றைய மதிப்பீட்டில் அதிக சந்தை விலை நிர்ணயக்கப்படுகிறது. ஆனால், சொத்தை விற்றால் மட்டுமே அந்த அதிக விலையை கையகப்படுத்த முடியும். இல்லையென்றால் அது வெறும் ஏட்டுச்சுரைக்காய் மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் அவ்வாறு கையகப்படுத்தும் பணத்தை, சந்தைகளில் முதலீடு செய்யும் பொழுதோ அல்லது வேறு சில தேவையற்ற செலவீனங்களினால் இழப்பதற்கோ வாய்ப்பு உண்டு. மற்றும் வளர்ந்து வரும் சந்தையினால் எதிர்காலத்தில் கிடைக்கும் மதிப்பு உயர்வை இழக்கவும் நேரிடும். மீள் அடமானம், வயதான காலத்தில் வருமானத்தை கொடுப்பது மட்டுமில்லாமல், சொத்தின் மதிப்பீட்டு உயர்வையும் உங்களுக்குப் பெற உதவுகிறது. மீள் அடமானம் எவ்வாறு செயல் படுகின்றது என பார்ப்போம்.
சாதகங்கள்:
|
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!! |
இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். copyright © RiyadhTamilSangam 2006 |