எழுத்துக்கூடத்தின் சந்திப்பு |
எழுத்துக்கூடத்தின் சந்திப்பு வெள்ளிவிழா கூட்டம் ---25 ஒரு பார்வை. --அஹமது சுபைர். |
எழுத்துக்கூடத்தின் 25
ஆம்
வெள்ளிவிழா
கூட்டம் - ஒரு
பார்வை
-
அஹமது சுபைர்.
========================
20 ஏப்ரல் 2007
========================
அது ஒரு
பொன் மாலைப் பொழுது...
ஆம்
எழுத்துக்கூடத்தின் 25 ம் அமர்வு
தான்.
சிந்தை
முழுதும் நம்மை ஆட்டிப்படைக்கும்
வேலைப்பளு இல்லாதிருக்கும்
வாரத்தின் ஒரே நாள் வெள்ளிக்கிழமை. மாதத்தின்
முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிகளில் கூடுகிற
இலக்கியத்தின் மீதான நம் அனைவரின்
ஆர்வம் தான் இந்த எழுத்துக்கூடம்
இத்தனை வெற்றிகரமாக நடப்பதின் மூல
காரணம். இந்த முறை
எழுத்துக்கூடத்தின் வருகைப்பதிவு
அதிகமாக இருந்தது.
ஆம், வழமையாக 4
முதல் 8 பேர்வரை கலந்துகொள்ளும்
எழுத்துக்கூடம் இந்த முறை 18 பேர்
கொண்ட மாபெரும் சபையாக மாறியது.
கலந்துகொண்டவர்கள்:
ஐயா அப்பாஸ்
ஷாஜஹான் மற்றும் குடும்பத்தினர்
(3)
'வாத்தியார்' கே.வி.ராஜா
மற்றும் குடும்பத்தினர் (2)
ஐயா
மாசிலாமணி அவர்கள் (1)
ஐயா
வெற்றிவேல் அவர்கள் (1)*
ஐயா விஜய
சுந்தரம் அவர்கள் (1)*
ஐயா இளங்கோவன் அவர்கள் (1)
ஐயா சோமு
அவர்கள் (1)
ஐயா
இம்தியாஸ் அவர்கள் (1)
ஐயா
பாலமுகுந்தன் அவர்கள் (1)
ஐயா அறவாழி
அவர்கள் (1)
கவிஞர்
ஹ.பஃக்ருத்தீன் அவர்கள் (1)
திருமதி.
மலர் சபாபதி அவர்கள் (1)
திரு தஞ்சை
மீரான் அவர்கள் (1)
இவர்களுடன்
நான் (அகமதுசுபைர்).
மற்றும்
வெகு தொலைவிலிருந்து, தகவல்
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான
வளர்ச்சியின் சாத்தியத்தால்,
நம்முடன் கலந்து கொண்ட ஐயா ஆசாத்
அவர்கள். (1) (கடைசியா பெயர்
போடுறது ஏன்னா..சினிமா படத்தில
டைரக்டர் பேர் கடைசியாத்தான்
வரும் :-))
வழமையாக
கூட்டத்தில்
கலந்துக்கொள்வதைத் தவறவிடாத
'இலக்கிய' ஷாஜஹான் தாயகம்சென்ற
மேற்குறிப்பிட்டவர்கள் தவிர நமக
இந்த கூட்டத்தின் தலைமைப்பொறுப
முதலாவதாக
கவியரங்கம்,
தமிழ்க்
கவிதைகள் மலினப்படுத்தப்பட்டதால்,
அவற்றின் எதிர்காலம் என்னவாகுமோ
என இருந்த பயம் மெல்ல அகன்றது
இந்த கவியரங்கத்தின் போது.
கவிஞர்கள்
முறையே திரு.ராஜா,
திரு.பஃக்ருத்தீன், திருமதி.
மலர், மற்றும் திரு. சுபைர்
(இவனுக்கெல்லாம் எதுக்கு
"திரு"ன்னு முணங்குறது எனக்கு
கேட்குது) மற்றும் திரு.
இளங்கோவன் தங்களின் மின்னஞ்சலில்
ஏற்கனவே பதிவான கவிதைகளை
அரங்கேற்றினர்.
இதில்
திருமதி மலர் அவர்கள் புதுக்கவிதையும்,
சுபைர் புதுக்கவிதைபோல ஒன்றும்
அரங்கேற்றினர். ஏனையோர்
மரபுக்கவிதைகளை கத்தியின்
கூர்மையான வீச்சினை ஞாபகப்
படுத்தும் கவிதைகளை அரங்கேற்றினர்.
இதில் ஐயா இளங்கோவன் அவர்கள்
ஒருபடி மேலேபோய் தனது
கட்டளைக்கலித்துறை+அந்தாதியினை
அழகாக பாடிக்காட்டினார். (அதில் 5
குறை கண்டுபிடிப்பவர்களுக்கு
பரிசும் உண்டாம்..எனக்கு இதுவரை
ஒன்னுகூட கிடைக்கல).
தமிழிசையில் கவியரங்கத்
தலைவர் தனது அழுத்தமான ஆழமான
கவிநயத்தில் நம்மை கட்டிப்போட்டார்
என்றால் மிகையில்லை. திரு ஆசாத்
அவர்கள் கானாப் பாடலும் பாடினார்,
எழுசீர் விருத்தமும் பாடினார்.
இதெல்லாம் போதாதென்று எனக்கு 10
ரியால் பரிசுக்கேள்வியும் கேட்டார்.
நம்ம தான் எதிலயும் அரைகுறை ஆச்சே.
என்ன செய்றது. 10 ரியால் போச்சு.
(கேள்வி என்ன என்று
கேட்பவர்களுக்கு தொ.பே தொடர்பில்
வாருங்கள்)
கவியரங்கக்
கவிதைகள் மிக விரைவில் மேலே
குறிப்பிட்ட வலைப்பதிவில்
"எழுத்துக்கூடம்" பிரிவில்
பதியப்படும். சிலரைப்பற்றி
எழுதுவதற்கும் ஞானம் வேண்டும்.
எனக்கு அது இல்ல. அதனால இத்தோட
நிறுத்துறது உத்தமம்.
அடுத்து
ஐயா பாலமுகுந்தன் அவர்களின் "மீள்
அடமானம்" (Reverse Mortgage)
பற்றிய கட்டுரை. இது ஏற்கனவே
எழுத்துகூடத்தில்
வந்திருந்தாலும், இன்று மற்றொரு
பரிணாமத்தை எடுத்துக்காட்டியது.
இலக்கியம்
என்பது கதை, கவிதை மட்டுமில்லை,
ஆக்கப்பூர்வமாக துறை சார்ந்தோர்
தத்தம் துறை பற்றிய அறிவாக்கங்கள்
எழுதியும் இலக்கியத்துக்கு
பங்காற்ற வேண்டும் என்ற இளங்கோவன்
ஐயா அவர்களின் கருத்து இங்கு
கவனிக்கத்தக்கது!
தங்களின்
துறைச் சார்ந்த இதுபோன்ற
பதிவுகளால் தமிழ் மேலும் வளரும்
என அனைவரும் கருத்து
தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற
கட்டுரைகளை எழுதித்தந்தால் புத்தக
வடிவில் வெளியிட வழிகாட்டுவதாக
ஐயா மாசிலாமணி கூறினார்.
மிக விரைவில் நாம்
எதிர்பார்ப்போம்...
அடுத்ததாக நண்பர்
ஃபக்ருத்தீன் "வாழ்க்கை நலம்"
என்ற பெயரில் வெண்பா வாசித்தளித
பின்னர் ஐயா மாசிலாமணி,
தமது பங்களிப்பாக "தாக்கம் தந்த தமிழர்கள்" தொடரை
சில
நேரங்கள் மறக்க முடியாததாக
ஆகிவிடுவதுண்டு. சில நேரங்கள்
மறக்கக் கூடாததாக ஆகிவிடுவதுண்டு.
சில நேரங்கள் இரண்டுமாய்
அமைவதுண்டு. அந்த கணங்கள் அமைந்தது
25ம் எழுத்துக்கூடத்தில்..
இத்துணை சிறப்பாக கடந்த 2
ஆண்டுகளாக இந்த எழுத்துக்
கூடம் நடக்கக் காரணமானவர்கள்.
கரு கொடுத்த முனைவர் அப்பாஸ், உருவாக்கிய ரியாத் தமிழ் சங்கம், அமைப்பாளராக செயல் பட்டுக் கொண்டிருக்கும் திரு வெற்றிவேல், முதல் தொகுப்பாளராக செயல்பட்டு இன்று நம்மை தவிக்கவிட்டு மறைந்த திரு கல்யாண், தற்போது தொகுப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரு ராஜா, தன் 'அக'த்தில் இந்த எழுத்துக்கூடத்துக்கு மகிழ்வுடன் இடமளித்து ஆதரவளிக்கும் திரு.பால முகுந்தன் ஐயா அவர்கள். தங்களுடைய மதிப்பான படைப்புக்களை இக்கூடத்தில் வலம் வரச்செய்வதன் வளம் சேர்த்துவருகிற, மூத்த, இளைய, புதிய இலக்கியகர்த்தர்கள். அப்படைப்புகளின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கும் 'வாத்தியார்'(கள்). தொடர்ந்தளிக்கும் தம்வருகையாலும், கருத்துக்களாலும் இந்நிகழ்வை உயிர்ப்பாக்கும் அனைத்து உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் மிகவும் நன்றிக்குரியவர்கள்
25ம் வாரம்
நடக்கும் இவ்வெழுத்துக்கூடம்,
வருடங்களையும் யுகங்களையும் கடந்து,
இடம் நாடு என்கிற பரிமாணங்களையும்
தாண்டி, தமிழுக்கும் தமிழ்கூறு
நல்லுலகுக்கும் பலப்பல தொண்டாற்றி
நிற்க வேண்டும் என்று
வாழ்த்துவமாக!
இத்தனையும்
பார்க்க நண்பன் கல்யாண் நம்முடன்
இல்லை எனும்போது மனம் கனக்கத்தான்
செய்தது.
அன்புடன்,
சுபைர்.
. |
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!! |
. |