எழுத்துக்கூடத்தின் சந்திப்பு |
எழுத்துக்கூடத்தின் சந்திப்பு --26 ஒரு பார்வை. --அஹமது சுபைர். |
எழுத்துக்கூடத்தின் 26
ஆம்
கூட்டம் - ஒரு
பார்வை
-
அஹமது சுபைர்.
========================
04 மே 2007
========================
வெயில் ஓய்ந்தாலும் அதன் அனல் ஓயாத மே
மாதத்தின் முதல் வெள்ளி மாலை.
DQ எனப்படும் தூதரகப்பகுதியின் சோதனைச்சாவடியில் தொடங்குகிறது இக்கட்டுரை. ஆறு மணிக்குள் இந்தியத்தூதுவர் ஐயா அவர்களின் வசிப்பிடத்தை, எழுத்துக்கூடத்தின் பாவேந்தர் நினைவுக்கூட்டத்தின் பொருட்டு அந்நோக்கில் விரைந்து வந்த எங்களை 5:55க்கு நிறுத்திய அந்த சோ.சா.பாதுகாப்பு அதிகாரிக்கு 'இந்தியத்தூதர் அகம்' என்று நாங்கள் விடையளித்தும் 'இந்தநேரத்தில் எதற்கு?' என்ற எதிர்க்கேள்வியில் ஓரங்கட்டி விட, பின்னால் வந்த வாகனத்தில் ஐயா அப்பாஸ் ஷாஜஹான். அவர்களைக் கண்டு சற்றே ஆறுதலடைந்தோம். ஒருவழியாக, (வேற வழி இல்லை :-)) ) தூதர் ஐயா அவர்களின் வசிப்பிடத்தை அடைந்தபோது, கூட்டம் அப்போதுதான் தொடங்கப்பட்டு இருந்ததை உணரமுடிந்தது. பாவேந்தர் அவர்கள் வாழ்ந்த புதுவை மண்ணில் பாவேந்தருக்கு பற்பல அரசு விழாக்கள் கண்ட புதுவையின் நாயகர் தூதர் ஐயா அவர்கள் முன்னிலையில் எழுத்துக்கூடத்தின் 26ம் அமர்வு பாரதிதாசனார் நினைவைப் போற்றிடும் வகையில் கூட, கூடவே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் புதுவையின் இளையத்தாரகை, அமைச்சர் ஷாஜஹான் அவர்கள். தமிழிலும் தமிழர் பரப்பிலும் புரட்சியை விதைத்த பாவேந்தர் நினைவுக்கூட்டம் இலக்கியம் சமைத்த, இலக்கியம் ருசித்த, இலக்கியம் ஆய்ந்த பேரறிஞப் பெருந்தகைகள் கூடியிருந்தக் கூட்டத்தில் நாங்களும் கல்லூரியில் முதல் நாள் அமர்ந்து பாடம் கவனிக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தோம். முதலில் கலந்துகொண்டவர்கள், 1. மாண்புமிகு இந்திய தூதுவர் திரு M.O.H.ஃபரூக் அவர்கள் 2. மாண்புமிகு புதுச்சேரி கல்வி, கலை மற்றும் கலாசாரம், போக்குவரத்து, மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. ஷாஜஹான் அவர்கள் (அப்பாடா எல்லாதுறையையும் சொல்லியாச்சுன்னு நினைக்கிறேன்.. :-)) 3. தமிழ்ச்சங்க கலை மற்றும் இலக்கிய குழு ஒருங்கிணைப்பாளரும், எழுத்துக்கூட நிறுவனர்களில் ஒருவரும் ஆன ஐயா திரு. வெற்றிவேல் அவர்கள் 4. தமிழ்ச்சங்க முன்னாள் தலைவரும், வேலைத்திறன் மேம்பாட்டுக்குழு உறுப்பினரும், எழுத்துக்கூடத்தின் தூண்களில் ஒருவருமான ஐயா திரு. ஜெயசீலன் சந்தானம் அவர்கள் 5. "நோபல் நாயகன்", "தமிழின தொண்டன்" ஐயா திரு. மாசிலாமணி அவர்கள் 6. தமிழ்ச்சங்க தலைவர் திரு. சஜ்ஜாவுதீன் மற்றும் குடும்பத்தினர் 7. தமிழ்ச்சங்க செயலாளர் திரு. சுவாமிநாதன் அவர்கள் (லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து தூதர் ஐயா அருகிலேயே இடம் கிடைக்கப்பெற்றவர்) 8. தமிழ்ச்சங்க பொருளாளர் திரு. ஜாஃபர் சாதிக் அவர்கள் 9. தமிழ்ச்சங்க சமூக சேவைக்குழு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் எழுத்துக்கூடத்தின் தூண்களில் ஒருவருமான ஐயா திரு. இம்தியாஸ் அவர்கள் 10. ஐயா ஜாஃபர் அவர்கள் (புதிய உறுப்பினர்) 11. ஐயா அப்துல் அஜீஸ் அவர்கள் (புதிய உறுப்பினர்) 12. ஐயா திரு.சபாபதி மற்றும் அவர் துணைவியார் கவிஞர் மலர் சபாபதி அவர்கள் 13. "வாழும் தமிழ்" ஐயா திரு. இளங்கோவன் அவர்கள் 14. கணிணித்துறையின் நாயகன் பில்கேட்ஸின் ஆசி பெற்ற திரு அப்பாஸ் ஷாஜஹான் மற்றும் குடும்பத்தினர் (Microsoft'ல வேலை செய்யுறார்பா) 15. கம்பர் மற்றும் பாரதியின் வரிசையில் வளரும் எழுத்தாளர் திரு. மீரான் 16. எழுத்துக்கூட
ஒருங்கிணைப்பாளரும், எங்களின்
வாத்தியாருமான திரு. ராஜா அவர்கள் இந்தியத் தூதுவரும், நம் தமிழ்ச்சங்கப்புரவலருமான மேதகு M.O.H. ஃபரூக் ஐயா அவர்கள், பாவேந்தர் கவிதை நூற்களை; குறுந்தகடுகளை புதுவை அரசின் சார்பில் அனுப்பித் தரும்படி புதுவை அமைச்சர் ஷாஜஹான் அவர்களிடம் கோரிக்கை வைத்ததும், விரைவில் ஆவன செய்வதாக அமைச்சர் மறுமொழிந்ததும். தமிழுக்குத் தொண்டாற்றும் அரசுக்குப்பின்னர் இத்தகைய உயர்தமிழ்ச் செம்மல்களைப் போற்றும் விழாக்கள் தொடர்ந்து நடைபெறுமா? என்ற கவலை தொனிக்க வினா தொடுத்த தஞ்சை மீரானுக்கு, காலம் தன் தேவைகளை தானே தயாரித்துக்கொள்ளும் என்ற ரீதியில் தூதர் ஐயா அளித்த மறுமொழி.
அன்புடன்,
சுபைர்.
. |
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!! |
. |