எழுத்துக்கூடத்தின் 41 வது சந்திப்பு - ஒரு
பார்வை
இடம்: திரு. ஜெயசீலன் அவர்கள் இல்லம்
நீ...ண்..ட இடைவெளிக்குப்பின் நேற்று
எழுத்துக்கூட நிகழ்விற்கு சென்றிருந்தேன்...
நண்பர்களை
ஆவலாய் சந்திக்கப் போன எனக்கு மிகப்பெரும்
ஏமாற்றமே..!
ஜெயசீலன் ஐயா வீட்டில் நிகழ்ந்த
இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் என்னுடன்
சேர்த்து
நால்வரே... (திரு மாசிலாமணி ஐயா,திரு
நாக.இளங்கோவன்,திரு ஜெயசீலன் ஐயா மற்றும்
நண்பர் ராஜப்பா அவ்வளவே)
வெற்றிவேல் ஐயா இந்தியா சென்றிருப்பதாய்
அறிந்தேன். நண்பர் ராஜா அலுவலகப்
பளுவில்-பணியில்
நண்பர் ஃபகுருதீன் உம்ராவில்...
சகோதரி மலர்ச்செல்வி எங்கே..?
திரு பாலமுகுந்தன் ஐயா எங்கே..?
நண்பர் அப்பாஸ் ஷாஜஹான் எங்கே..?
நண்பர் மீரான் எங்கே?
மற்றும் சில தொடர்-பங்கேற்பு நண்பர்களையும்
காணவில்லை..பொலிவிழக்கிறதோ என்ற எண்ணமும்
வருத்தமும் எழாமலில்லை..
உடனே சீரமைக்க-ஆவண செய்க
நண்பர் லக்கி ஷாஜஹான் அவர்களே,
யார் ஊரில் இல்லையென்றபோதும் எழுத்துக் கூடம்
தொடர்ந்து நடை பெற செய்த நிகழ்வு ஒன்றே, இது
என்றும் சிறப்பாகத் தொடரும் என்பதற்கு சிறந்த
எடுத்துக் காட்டு.
நம் தமிழ் பணி என்றும் சிறக்கச் செய்வோம் என்ற
உறுதியுடன்
அன்பன்,
மு.வெற்றிவேல்.